ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1997 அன்று விடுத்துள்ள அறிக்கை :-

புதுவை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கில் உடனடியாக நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்திடவும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் கோபால்சந்தர் மற்றும் போலீசார் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக மீண்டும் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சந்திரசேகர் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், பாதுகாப்பும் வழங்கிடக் கோரியும் இன்று 08.01.1997 அன்று மாலை 4 மணியளவில் புதுவை ஆளுநர் மாளிகை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருந்ததை அறிவீர்கள்.

தவிர்க்க இயலாத சூழலில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*