புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆதரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் நாளை (24.08.2010) எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்று, இந்த கல்வி ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், அரசியல் சட்டத்திற்கு எதிரான பிராந்திய இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிகைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆதரவுத் தெரிவித்துக் கொள்கிறோம். முழு அடைப்புப் போராட்டம் வெற்றிப் பெற அனைத்து தரப்புப் மக்களும், மாணவர்களும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டுமென வேண்டுகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*