ஐந்து கொள்ளையர்கள் என்கவுன்டர் கொலை – நீதி விசாரணை தேவை: மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு கிளை (Peoples Union for Human Rights – PUHR, TamilNadu Chapter) தலைவர் அ. மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (Federation for People’s Rights – FPR, Puducherry) செயலாளர் கோ.சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி (மதுரை) ஆகியோர் 23.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சென்னையில் சமீபமாக நடைபெற்ற இரு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் எனக் கருதப்படும் ஐவர் நேற்றிரவு தமிழக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிடுகிற தகவல்கள் வழக்கமாக இது போன்ற சம்பவங்களில் சொல்லப்படுபவைதான். நீதிமன்றத் தலையீடு, மற்றும் விசாரணைகளுக்குப் பின் இதுபோன்ற என்கவுன்டர் கொலைகள் பலவும் போலியானவை என நிரூபணமாகியுள்ளன. உச்சநீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் இவற்றைக் கண்டித்துள்ளன. எத்தகைய குற்றவாளியானாலும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதே நீதியாகும். இப்படி மோதலில் கொல்வது மனித உரிமை மீறல் மட்டுமல்ல பின்னணி உண்மைகளையும் ஒரே அடியாய் மறைக்கக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன.

ஐவரில் ஒரு சிலரைக்கூட ஒரு பெரும் போலீஸ் படையினரால் உயிருடன் பிடிக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியவில்லை. ஒரே நேரத்தில் ஒரு சில நிமிடங்களில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு 2008ம் ஆண்டு வெளியிட்ட நெறிமுறைகள் ஆகியன இதில் பின்பற்றப்பட வேண்டும். பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரால் இந்த என்கவுன்டர் கொலைகள் விசாரணை செய்யப்பட வேண்டும். என்கவுன்டர் செய்த காவலர்கள் தாங்கள் தற்காப்புக்காகத்தன் சுட்டுக் கொல்ல நேர்ந்தது என்பதை நிரூபிக்கும் வரை இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். வீரப்பரிசுகள். முறை மீறிய பதவி உயர்வுகள் எதுவும் அவர்களுக்கு அளிக்கப்படக் கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*