முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். குருசாமி காலமானார் – வீரவணக்கம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (1.7.2017) விடுத்துள்ள அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மத்திய அரசின் தாமிர பட்டய விருதுப் பெற்ற புதுச்சேரி சுதந்திரப் போராட்ட தியாகி என்.குருசாமி மறைவுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

1922ம் ஆண்டு பிறந்த என்.குருசாமி 1959ம் ஆண்டு முதல் மக்கள் பிரதிநிதிச் சபையிலும், சட்டசபையிலும் உறுப்பினராக இருந்தவர். 1963 முதல் 1968ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் கொறடாவாகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

1960 முதல் 1985ம் ஆண்டு வரையில் 25 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலராக இருந்து திறம்பட செயல்பட்டவர். மேலும் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினராகவும் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். புதுச்சேரியின் அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அரசியலில் அப்பழுக்கற்ற தலைவரான இவர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்பவர். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சித் தோழர்கள் என அனைவருக்கும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*