|
|
|
|
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரி அரிகரன் அரசு அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் சென்றது தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியான அரிகரன் பாரதியார் பலகலைக்கூடத்தின் முன்னாள் [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
கூடுதல் கலால் வரி கட்டாமல் அரசை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி துணை நிலை ஆளுநருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று மனு அளித்துள்ளோம்.
மும்பையைச் சேர்ந்த திலக்நகர் இன்டஸ்ட்ரீஸ் லிட் என்ற நிறுவனம் ‘மேன்ஷன் ஹவுஸ் பிராண்டி’ உள்ளிட்ட மது [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதீமன்றத்தின் பெயரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய அரசு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மாற்ற வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றிய பிறகும்கூட [...]...மேலும்
புதுச்சேரி சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி 12.02.2010 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறையில் தூய்மையான குடிநீர், போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, பார்வையாளர் அறையில் உறவினர்களுடன் நெருங்கிப் பேச வசதி ஆகிய அடிப்படை [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், புதுச்சேரி அரசு உடனடியாக மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை சிறைக்கு அனுப்பி நிலைமைகளைக் கண்டறிய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் சுமார் 100 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக காலவரையற்ற [...]...மேலும்
சேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமைத் தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. வழக்குரைஞர் ப.பா. மோகன், மக்கள் சிவில் உரிமைக் [...]...மேலும்
Drawing Courtesy: Brydie Cromarty.
மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR) - மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (FPR) ஆகியவை சார்பில் 30.01.2010 சனியன்று காலை 10 முதல் மாலை 6 மணி வரை, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரிலுள்ள இக்சா மையத்தில் “சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் - பன் மாநிலக் கருத்தரங்கம்” நடைபெற உள்ளது.
முதல் அமர்வு காலை 10 முதல் 2 மணி வரையில் நடக்கிறது. இந்த அமர்வுக்கு கோ. சுகுமாரன் (செயலாளர், [...]...மேலும்
Drawing Courtesy: Brydie Cromarty.
வேறெப்போதையும் விட சிவில் மற்றும் மனித உரிமைகள் பறிக்கப்படக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயம், தடையற்ற முதலீட்டுக் கொள்கைகள் ஆகியவற்றின் விளைவாக மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படும் நிலை இன்று உச்சமடைந்துள்ளது. கனிமவளம், நீர்வளம் மிக்க பொதுச் சொத்துக்களையும் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களையும் கார்ப்பரேட்டுகள் சொந்தமாக்கிக்கொள்ளும் கருவிகளாகப் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக, பாதிக்கப்படும் மக்களும் மக்கள் இயக்கங்களும் போராடும்போது அரசுகள் மிகுந்த வன்மத்துடன் கடும் அடக்குமுறையை ஏவுகின்றன. [...]...மேலும்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகத்தின் ஊழல்கள் மற்றும் பழிவாங்கல்கள் - உண்மை அறியும் குழு அறிக்கை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் (CMD) ஏ.ஆர்.அன்சாரி மற்றும் நிர்வாகத்தின் ஊழல்களைத் தட்டிக் கேட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தற்காலிகப் பணி நீக்கம், இடமாற்றம் முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதோடு ஊழியர்களைக் கண்காணிக்க தனியார் உளவுத்துறை பயன்படுத்தப்படும் என பகிரங்க எச்சரிக்கையையும் செய்துள்ளதால் பெரும் அச்சம் நிலவுவது குறித்து மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் என்கிற வகையில் எங்களுக்கு [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.12.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:
துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடர உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
புதுச்சேரி அரசு 2600 கோடி ரூபாய் மதிப்பில் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை செயல்படுத்த கடந்த 2005-ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இந்த ஒப்பந்தப்படி [...]...மேலும்

