|
|
|
|
உண்மை அறியும் குழு அறிக்கை
கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு விவரங்களையும் அறிந்து கொண்டோம்.
உத்தபுரத்தைப் பொறுத்தமட்டில் சுவர் இடிக்கப்பட்டது தொடங்கி இதுவரை மும்முறை அங்குச் சென்று வந்துள்ளோம். தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சுமார் ஒன்றரையாண்டு ஆன பின்னும் கூட இன்றும் அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் (பள்ளர்), வாகனப் போக்குவரத்தை ஆதிக்கச் சாதியினர் (பிள்ளைமார்கள்) அனுமதிக்கவில்லை. [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 2-ந் தேதியன்று காலை 10 மணியளவில், பெருந்தலைவர் காமராசர் கல்வித் துறை வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் சீ.சு.சாமிநாதன், பெற்றோர் [...]...மேலும்
தமிழக அரசைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
22.06.2010 அன்று, காலை 11 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் இர.அபிமன்னன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் [...]...மேலும்
சென்னை- திருச்சி அகல ரயில் பாதையில் பேரணி ரயில் நிலையத்திற்கும் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள சித்தணி கிராமத்தின் அருகில் ரயில் பாதையில் ஜூன்12ஆம் நாள் இரவு சுமார் 2 மணியளவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தண்டவாளம் தகர்ந்து மலைக்கோட்டை ஏக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய செய்தி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும் உயிரிழப்பை எற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. எத்தகைய நியாயமான [...]...மேலும்
ராஜகிரியில் மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் - தடியடி பொய் வழக்குகள் - உண்மை அறியும் குழு அறிக்கை!
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ராஜகிரி கிராமம். இச்சாலையோர கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனார் (சுமார் 85 சதவீதம்) முஸ்லிம்கள். சுமார் 10 சதவீதம் தலித்கள். கடைதெருவிலுள்ள கடைகளிலும் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை.
இன்று தமிழகம் முழுவதிலும் கடும் மின்வெட்டு உள்ளதை அறிவோம். நகரங்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரமும், அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களும் செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் மேலும் [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.06.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் தற்போது நடந்து முடிந்த ஒப்பந்த ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் மதிபெண்களைத் திருத்தி ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் 131 ஒப்பந்த ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் [...]...மேலும்
...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 21.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
அமைச்சர் ஷாஜகான் பதவி விலக கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் புதுச்சேரி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமைச்சர் ஷாஜகான் மீது சென்னை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை நடத்த தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியை வெளிக் கொண்டு வந்த பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த சி.பி.ஐ.க்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்திய காரணத்தினால் பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டுமென அவரது [...]...மேலும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.04.2010 அன்று விடுத்துள்ளா அறிக்கை:
பழங்குடியின மக்களை ‘பிற்படுத்தப்பட்ட பழங்குடி’ என வகைப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டுள்ள புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுகிறோம்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திய பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு [...]...மேலும்

