காரைக்கால் மார்க் துறைமுகத்தை எதிர்த்து மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அலுவலக முற்றுகை: ஜூன் 26க்கு தள்ளிவைப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.05.2018) விடுத்துள்ள அறிக்கை:

காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தி வரும் மே 15ம் தேதியன்று நடைபெற இருந்த மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அலுவலக முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 02.05.2018 அன்று புதுச்சேரியில் உள்ள அரசியில் கட்சிகள், சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் மே 15ம் தேதியன்று, காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தி புதுச்சேரி அரசின் மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா. அழகிரி திடீரென மரணமடைந்தார். சமூக அமைப்புகளின் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவரின் இழப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், வரும் ஜூன் மாதம் 2ம் தேதியன்று அன்னாரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி முதலியார்பேட்டை வானொலித் திடலில் நடைபெற உள்ளது.

இந்ந்நிலையில், மேற்சொன்னவாறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் நடைபெற இருந்த மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அலுவலக முற்றுகைப் போராட்டம் எதிர்வரும் ஜுன் மாதம் 26ம் தேதியன்று நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*