சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினம்: மாலை அணிவித்து மரியாதை!

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் சீ.சு.சாமிநாதன், ப.மார்கண்டன், கலைவாணன், காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவுநர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் தாகூர் அரசுக் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் மாணவர்கள் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*