தந்தை பெரியார் 37-வது நினைவு தினம்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அஞ்சலி

தந்தை பெரியார் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், சு.காளிதாஸ், ஏ.கலைவாணன், பா.காளிதாஸ், கி.சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் விக்னேஷ் குமார், முருகன், மதிவாணன், ராஜா, பரணி, விக்னேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*