சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் – பன் மாநிலக் கருத்தரங்கம் – அழைப்பிதழ்!


Drawing Courtesy: Brydie Cromarty.

மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR) – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (FPR) ஆகியவை சார்பில் 30.01.2010 சனியன்று காலை 10 முதல் மாலை 6 மணி வரை, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரிலுள்ள இக்சா மையத்தில் “சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் – பன் மாநிலக் கருத்தரங்கம்” நடைபெற உள்ளது.

முதல் அமர்வு காலை 10 முதல் 2 மணி வரையில் நடக்கிறது. இந்த அமர்வுக்கு கோ. சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு) தலைமைத் தாங்குகிறார். மூத்த மனித உரிமை ஆர்வலர், எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை கருத்தரங்க திறப்புரை ஆற்றுகிறார்.

பல மாநிலங்களில் இருந்து வருகை தரும் மனித உரிமைத் தளாங்களில் பணியாற்றிவரும் ஆர்வலர்கள் கருத்துரை வழங்குகின்றனர். கவிதா ஸ்ரீவத்சவா (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஜஸ்தான்), வி.எஸ்.கிருஷ்ணா (மனித உரிமை மன்றம்), டாக்டர் அபுர்வானந்த் (தில்லிப் பல்கலைக்கழகம், புதுதில்லி), சத்தியா சிவராமன் (பத்திரிகையாளர், புதுதில்லி), பேராசிரியர் நகரி பாபையா (மக்கள் ஜனநாயக மன்றம், பெங்களூரு) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

இரண்டாவது அமர்வு மதியம் 3 முதல் மாலை 4.30 மணி வரையில் நடக்கிறது. வழக்கறிஞ்ர் ரஜினி (மனித உரிமைக்கான மக்கள் கழகம்) தலைமைத் தாங்குகிறார். பேராசிரியர் பிரபா.கல்விமணி தொடக்க உரையாற்றுகிறார். வழக்கறிஞர் கே.கேசவன் (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), ஏ.எஸ்.அப்துல் காதர் (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு), வழக்கறிஞர் பா.புகழேந்தி (தமிழக மக்கள் உரிமைக் கழகம்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மூன்றாவது அமர்வு மாலை 4.30 முதல் 6 மணி வரையில் நடக்கிறது. இந்த அமர்வு விவாத அரங்காக நடக்கிறது. விவாதத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.

கருத்தரங்கில் கலந்துக் கொள்பவர்களுக்கு தேனீர் மர்றும் உணவு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள அழைக்கின்றோம்!

தொடர்புக்கு:

அ.மார்க்ஸ் – 9444120582.
மின்னஞ்சல்: professormarx@gmail.com

கோ.சுகுமாரன் – 9894054640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*