கவியரசு கன்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

புதுச்சேரி கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 17.10.2020 அன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி, செந்தாமரை நகரில் நடைபெற்றது.

கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு வரவேற்றார். கழகத்தின் நிறுவுநர், அமைப்பாளர் தி.கோவிந்தராசு கவியரசு கண்ணதாசன் பற்றி நினைவுரை ஆற்றினார். முதல்வரின் பாராளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.

காவல்துறை கண்காணிப்பாளர் வீர. பாலகிருட்டிணன், பேராசிரியர் நா.இளங்கோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலர் புதுவைத் தமிழ்நெஞ்சன், கண்ணதாசன் இலக்கியக் கழக நிர்வாகிகள் கோதண்டராமன், வீரட்டீஸ்வரன், அருள்செல்வம், கஜேந்திரன், பாவலர் யுகபாரதி உட்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியை கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*