புதுச்சேரியில் உண்மை அறியும் குழு மீது தாக்குதல்: மே 10-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 02.05.2012 அன்று மாலை 6 மணியளவில், புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி, அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தி.சஞ்சீவி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சலீம், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் லூ.கஸ்பர், பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் கே.ராம்குமார், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், மனித நேயம் அமைப்பு நிறுவனர் கோ.லோகலட்சகன், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை பொறுப்பாளர் கு.மோகனசுந்தரம், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன், உறுப்பினர் ஜே.விக்னேஷ்குமார், தமிழர் களம் தலைவர் கோ.பிரகாசு, கிராமப்புற அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பெ.சந்திரசேகரன், அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அபுபக்கர், ஆதிதிராவிடர் உரிமை இயக்கத் தலைவர் ச.பாலசுந்தரம், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் இரா.சுகுமாரன், நுகர்வோர் குரல் பொறுப்பாளர் கு.கலைப்புலி சங்கர், செந்தமிழர் இயக்க உறுப்பினர் தி.அமிர்தலிங்கம், கிராமப்புற முற்போக்கு இளைஞர் கூட்டமைப்பு தலைவர் பெ.சரவணன், அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, மக்கள் மன்ற தலைவர் மு.நாராயணசாமி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கப் பொதுச்செயலாளர் பா.சரவணன், அவதாரங்கள் கலைக் குழுத் தலைவர் செ.பெ.அருணகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் மார்கண்டன், தம்பு.சு.காளிதாஸ், ஏ.கலைவாணன், பா.காளிதாஸ், கடலூர் பாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உறுவையாறில் சக்திவேல் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக கூறப்படும் சமபவம் குறித்து விசாரிக்க சென்ற உண்மை அறியும் குழுவினர் மீது போலீசார் தூண்டுதலின் பேரில் நடந்த தாக்குதலையும், மனித உரிமை ஆர்வலர்களின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் காவல்துறை, புதுச்சேரி அரசின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை, அரசின் இந்தப் போக்கை கண்டித்து வரும் மே 10 வியாழக்கிழமை, காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2. உறுவையாறில் சக்திவேலை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக கூறப்படும் சமபவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

3. உண்மை அறியும் குழு மீது நடந்த தாக்குதல் குறித்து மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் இத்தாக்குதலுக்கு காரணமானவரிடம் ஒரு புகாரை பெற்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் மீது போலீசார் பொய் வழக்குப் போட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

4. கரிக்கலாம்பாக்கம், பெருங்கலூரை சேர்ந்த ஜெகதீசன் தவறுதலாக குண்டு வீசிக் கொல்லப்பட்டதற்கு அரசே முழுப் பொறுப்பு என்பதால் அக்குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும், குண்டு வீச்சில் காயம்பட்டவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடும் வழங்க வேண்டும்.

5. புதுச்சேரியில் அண்மைக் காலமாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதற்கு பெரும்பான்மையான போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளோடு நெருக்கமாக கைகோர்த்து உறவு வைத்துள்ளதே காரணம். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

6. உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நடந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*